அண்மைய செய்திகள்

recent
-

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீளாய்விற்கு உட்படுத்த முடியும்


2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வுக்கு உட்படுத்த எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீ்ட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக தமது விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பங்களை எதிர்வரும் காலத்தில் ஊடகங்கள் ஊடாக வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டதுடன் www.donets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.ஜே.புஷ்பகுமார கூறினார்.

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீளாய்விற்கு உட்படுத்த முடியும் Reviewed by NEWMANNAR on March 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.