தகவல் அறியும் சட்டமூலம் : 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்
தகவல் அறியும் சட்டமூலம் வியாழக்கிழமை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொறடாவுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார்.
இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டபோதும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் கயன்த கருணாதிலக மேலும் கூறுகையில்,
கடந்த பாராளுமன்ற அமர்வின்போது அரசால் தகவல் அறியும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணக்கப்பாடு கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கயன்த கருணாதிலக தெவித்தார்.
தகவல் அறியும் சட்டமூலம் : 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்
Reviewed by NEWMANNAR
on
March 21, 2016
Rating:

No comments:
Post a Comment