அண்மைய செய்திகள்

recent
-

சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உபகரணங்களை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ்-படம் இணைப்பு


சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு மின்சார நீர்ப்பம்பிகளையும் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு பிளாஸ்டிக் கதிரைகளையும் வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான எச்.எம். றயீஸ் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.

வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீPலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான எச்.எம். றயீஸ் அவர்களின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுயதொழில் முயற்சியாளர்களினை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட மின்சார நீர்ப்பம்பிகள் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கதிரைகள் என்பன மன்னார்;, முசலி, நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களின் பயனாளிகளுக்கு மாகாண சபை உறுப்பினரின் மன்னார் அலுவலகத்தில் வைத்து மாகாணசபை உறுப்பினரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும்; ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உபகரணங்களை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ்-படம் இணைப்பு Reviewed by NEWMANNAR on March 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.