அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல்.



தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்திற்கு அமைவாக மன்னார் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை(25) காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.



மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 25ம்திகதி திங்கட்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரைநீர் மன்னாரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் நீர் வினியோகம் துண்டிக்கப்படும் என பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் துண்டிப்பு தொடர்பான முக்கிய அறிவித்தல். Reviewed by NEWMANNAR on April 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.