சம்பந்தன், ரோர் ஹட்ரெம் ஆகியோர் இடையே விஷேட சந்திப்பு!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் ரோர் ஹட்ரெம், எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், அபிவிருத்தி ஆகிய விடயங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ரோர் ஹட்ரெம் இலங்கை வந்துள்ளார்.
இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள அவர், நேற்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இன்று யாழப்பாணம் செல்லவுள்ள அவர், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், வளலாய் பகுதியில், ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஊடாக, நோர்வேயின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சாபாநாயகர் கரு ஜயசூரியவையும் ரோர் ஹட்ரெம் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பந்தன், ரோர் ஹட்ரெம் ஆகியோர் இடையே விஷேட சந்திப்பு!
Reviewed by Author
on
June 01, 2016
Rating:
Reviewed by Author
on
June 01, 2016
Rating:


No comments:
Post a Comment