அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (10-07-2016) கேள்வி பதில்

கேள்வி:−
       மரியாதைக்குரிய வழக்கறிஞர் SuthaLaw அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.Sir நான் யாழ்பாணம்  (×−×−) இருந்து மதன்.Sir எனது அப்பாவும், அவரது நண்பரும் சேர்ந்து 2010ஆம் ஆண்டு வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கியிருந்தனர்.இந்த நிலையில் அப்பாவின் நண்பர் இறந்துவிட்டார்.தற்போது அந்தக் கடனுக்கு யார் பொறுப்பு?

பதில்:−
       அன்பான சகோதரரே! உங்களது அப்பாவோடு இணைந்து கடன் வாங்கியவர் இறந்துவிட்டதால் மொத்தக் கடனையும் கட்டவேண்டிய பொறுப்பு உங்கள் அப்பாவைச் சேர்ந்தது அல்ல.ஆனால் வங்கிகள் கடனைத் திருப்பி வசூலிப்பதற்கு உங்கள் தந்தைதான் முதன்மையான நபராவார்.இறந்தவருக்கு பிள்ளைகள் அல்லது சட்ட ரீதியிலான வாரிசு இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் அந்த கடனை வசூலிப்பார்கள்,பிள்ளைகள்/வாரிசு இல்லையெனில் உங்களது தந்தையே அந்த கடனை திருப்பி செலுத்த கடமை பட்டவராவார்.எனவே தாங்கள் அது சம்பந்தமாக ஒரு சட்டத்தரணி மூலமாக உங்களது அப்பாவின் நண்பரின் பிள்ளைகள்/வாரிசுகளுடன் பேசி முடிவெடுங்கள்.அவர்கள் அதனை உதாசீனம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடருங்கள்
இன்றைய (10-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.