அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரத்துடன் மோதி 4 யானைகள் பலி.(படங்கள் )

தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(16) இரவு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இரவு 11.45 மணியளவில் செட்டிக்குளம் மினிக்பாம் புகையிரத வீதியில் கூட்டமாக நின்ற யானைகளில் புகையிரதம் மோதியதில் 4 யானைகள் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த 4 யானைகளில் ஒன்று குட்டி யானை என தெரிய வந்துள்ளது.

இன்று புதன் கிழமை காலை சட்பவ இடத்திற்கு வந்த செட்டிக்குளம் பொலிஸார் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் உயிரிழந்த யானைகளின் உடலங்களை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த யானைகளை பார்வையிட அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்
(17-08-2016)















தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரத்துடன் மோதி 4 யானைகள் பலி.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.