அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு-(படம்)

இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் இன்று புதன் கிழமை காலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மாவட்ட உதவி பிராந்திய முகாமையாளர் லோகநாதன் சஞ்ஜீவ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் கலந்து கொண்டு வைபவ ரீதியாக குறித்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் மன்னார் மற்றும் வவுனயா மாவட்டங்பகளுக்கான பிராந்திய அலுவலமாக குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.

இதன் மூலம் குறித்த இரு மாவட்டங்களிலும் மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவித்தல், புதிய மரமுந்திரிகை கண்றுகளை பயணாளிகளுக்கு வழங்கி வைத்தல் உள்ளிட்ட பவ்வேறு செயற்பாடுகள் குறித்த அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள்,பயணாளிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தகக்து.






மன்னார் நிருபர்
(25-1-2017)









மன்னாரில் இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு-(படம்) Reviewed by NEWMANNAR on January 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.