பலாலியில் அரசாங்கம் சுவீகரித்த காணிகளின் உரிமையாளர்களுக்கு ஓர் அறிவித்தல்...
பலாலி விமனநிலையத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை, காணி அமைந்துள்ள கிராம அலுவலர்களிடம் பதியுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த1952 மற்றும் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அரசாங்கத்தினால் 956 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டது.
அவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கில் தற்போது காணிகளின் உரிமையாளர்களை இனம்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலாலியில் கடந்த மாதம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்படும் பொழுது அரசாங்கத்தினால் இழப்பீடு வழங்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் ஒரு அங்கமாகவே சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களை இனம் கண்டு அவர்களைச் சொந்த நிலத்துக்கு அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டு அவர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பலாலியில் அரசாங்கம் சுவீகரித்த காணிகளின் உரிமையாளர்களுக்கு ஓர் அறிவித்தல்...
Reviewed by Author
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment