மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை காணவில்லை.(படம்)
மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடந்த 2 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை(6) முறைப்பாடு செய்துள்ளார்.
62 வயதுடைய ரி.யேசு மரியதாஸ் ஆகிய தனது கனவர் மன நோயினால் பாதீக்கப்பட்டவர் எனவும்,கடந்த 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து காணாமல் பேயுள்ளதாகவும்,அவரை தேடிய போதும் அவர் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை என மனைவி தெரிவித்தார்.

அவர் காணமல் போன நேரம் கருப்பு நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டீ சேட் அணிந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
தனது கனவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0232222934 மற்றும் 077 38 17 516 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மனைவி தெரிவித்துள்ளனர்.
மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை காணவில்லை.(படம்)
Reviewed by NEWMANNAR
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment