அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் வழங்கக் கோரி 05வது நாளாக போராட்டம்.-Photos

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றுடன் (08-05) 05 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களாக பனியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் 51 சுகாதாரத் தொண்டர்கள் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சுகாதாரத் தொண்டர்களுக்கே முன்னுரிமை வழங்கு, நல்லாட்சி அரசே சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கு, தொண்டர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கு,வடமாகாணசபையின் சுகாதாரத் தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கு போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

சேவையாற்றியகாலப்பகுதியின்அடிப்படையில்நிரந்தரநியமனத்தைவழங்குமாறுகோரி வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சுகாதாரத் தொண்டர்கள் ஆகிய நாம் 1994ம் ஆண்டு தொடக்கம் யுத்த காலம் மற்றும் நலன்புரி நிலையங்கள் முதற்கொண்டு இன்று வரை எதுவித வேதனமுமின்றி தொண்டர் அடிப்படையில் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்து செயற்பட்டு வருகின்றோம்.கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 06 பாடங்கள் சித்தியடைய வேண்டும் என்ற காரணத்தை கூறி இம்முறையும் நிரந்தர நியமனம் வழங்குவதிலிருந்து தட்டிக்கழிக்க முயற்சிக்கின்றனர். வடமாகாணத்தைப் பொறுத்தவகையில் கடந்த 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தத்தினால் எங்களின் கல்வியை சரியாக தொடரமுடியவில்லை.

எனவே சுகாதாரத் தொண்டர்களாக சேவையாற்றிய காலப்பகுதி அடிப்படையில் நிரந்தர நியமனத்தை வழங்கவும், சுகாதாரத் தொண்டர்களின் சேவைகளை அதிக கல்வித் தகுதி பாராது அனுபவரீதியான சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.அத்துடன், அரசியல் செல்வாக்குள்ள சில அரசியல் பிரதிநிதிகளினால் சுகாதார சேவைக்காக வரும் பெயர் விபரங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டாம் எனவும், வயது எல்லை பாராது சேவைக்கால அடிப்டையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை தங்களுக்கு வலியுறுத்துவதுடன் தங்களின் சாதகமான முடிவு கிடைக்கும் வரை எமது கவனயீர்ப்பு போராட்டம் வடமாகாணத்தில் தொடரும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் வழங்கக் கோரி 05வது நாளாக போராட்டம்.-Photos Reviewed by NEWMANNAR on May 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.