மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் வழங்ககோரி ஆர்பாட்டம்......
தலைமன்னார் பியர் கிழக்கு மேற்கு கிராமமக்கள் இன்று 04-10-2017 காலை 10 -00
மணியளவில் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்காமை புறக்கணிக்கப்படுவதாக கோரியே ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றது.
மேலும் கிராமத்தில் ஏற்கனவே றிஷாட் சிற்றி என்னும் கிராமத்தில் 300முஸ்லீம் குடும்பங்கள் இருப்பதாகவும் அத்துடன் ஊனமுற்றவர்களுக்கு என 10வீட்டுத்திட்டமும் வழங்கியிருந்தினர்.
ஆனால் சுமார் 150 தமிழ் குடும்பங்கள் நீண்டகாலமாக ஓலைக்கொட்டிலில்தான் வாழுகின்றோம் தற்போது வந்துள்ள வீட்டுத்திட்டத்திலும் 150 தமிழ்குடும்பங்களாகிய எம்மை பதியாது புறக்கணித்து மீண்டும் முஸ்லீம் மக்களுக்கும் வாடியமைத்து தொழில்செய்யும் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் பதியப்பட்டுள்ளது ஆனால் எம்மைபதியகேட்கும் போது முடியாது.
எனவும் அடுத்த முறை பார்ப்போம் எனவும் கூறியமையால் விரக்தியடைந்த மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராமசேவகர் மற்றும் கிராமசேவக நிர்வாக அதிகாரி பதிவுகளை மேற்கொள்ள பிரதேசசெயலாளர் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்க்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதால் சுமார் 1- 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது இது மூன்றாவது முறை என்றும் இம்முறையும் ஏமாற்றப்படுவோமானால் அடுத்தகட்டம் .....?????
---VMK---

மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் வழங்ககோரி ஆர்பாட்டம்......
Reviewed by Author
on
October 04, 2017
Rating:

No comments:
Post a Comment