அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் உயிர் பெறலாம்! உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம் -


2016ஆம் ஆண்டு புற்றுநோய் பாதித்த ஒரு 14 வயது சிறுமி எதிர் காலத்தில் தனது நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் தன்னை உயிர்ப்பிப்பதற்காக தன்னை உறைய வைக்குமாறு கேட்டுக்கொள்ள நீதிமன்றம் அவளது வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததால் அவளது உடல் உறைய வைக்கப்பட்டு Detroitஇல் உள்ள ஒரு சேமிப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

CRYONICS எனப்படும் உறைய வைத்தல் என்றால் என்ன? அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
ஒரு உடலை -196 டிகிரி செல்ஷியசில் உறைய வைப்பதே CRYONICS எனப்படுகிறது.

ஒருவர் சட்டப்பூர்வமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டதும் இதயம் தன் துடிப்பை நிறுத்திய 2 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களுக்குள் அவரது உடல் ஐஸில் வைக்கப்பட்டு இரத்தம் உறைவதைத் தடுக்கும் வேதிப்பொருட்கள் அவரது உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படும்.
CRYONICS மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அந்த உடல் உறை நிலைக்கு அருகில் உள்ள வெப்பநிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த உடலிலுள்ள இரத்தம் அகற்றப்பட்டு அதற்குப் பதில் உள்ளுறுப்புகளை அழுகாமல் பாதுகாக்கும் வேதிப்பொருள் ஒன்று உடலுக்குள் செலுத்தப்படும்.
உடலுக்குள் பனித்துகள்கள் உருவாகாமல் தடுப்பதற்காக இன்னொரு திரவம் உடலுக்குள் செலுத்தப்படும், பின்னர் உடல் -130 டிகிரிக்கு குளிர்விக்கப்படும்.

இந்த உடல் ஒரு கலனில் வைக்கப்பட்டு -196 டிகிரியில் உள்ள திரவ நைட்ரஜன் கொண்ட தொட்டிக்குள் அமிழ்த்தப்படும்.
மருத்துவ உலகில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்காக மிகத் தாழ்ந்த வெப்பநிலையில் உடல் காத்திருக்கும்.
இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு கூட பத்திரமாக இருக்கும் என்று Cryonics அமைப்புகள் தெரிவிக்கின்றன.







மீண்டும் உயிர் பெறலாம்! உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம் - Reviewed by Author on February 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.