அண்மைய செய்திகள்

recent
-

வன்னி பிரதேச காணிகள் தொடர்பான நூல் வெளியீடு -


வன்னி பிரதேசத்தில் அரச படைகளினால் பாதுகாப்பு என்ற போர்வையில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பான நூல் வெளியீட்டு விழா முல்லைத்தீவு நகர மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நூல் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஆய்வறிக்கையினை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் இலங்கை தொடர்பான அமர்வினை மையப்படுத்தி மக்களின் தற்போதைய உண்மை நிலையை வெளிப்படுத்தும் முகமாக குறித்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த காணி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்ற பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், சுவிஸ் நாட்டின் S.T.P இயக்கத்தின் அமைப்பாளர் வூவி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹர்மன் குமார, வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அ.ஜேசுதாசன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வின்போது கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி பிரதேச காணிகள் தொடர்பான நூல் வெளியீடு - Reviewed by Author on February 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.