மன்னார் இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, நடாத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை 27-02-2018 காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
-சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக குறித்த தொழிற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
-இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றுதல் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பனணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்,தொழிற்பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வெளிக்கன்ன,தேசிய இளைஞர் ரேசவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டீ.எம்.சிசர குமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தொழில் திணைக்க அதிகாரிகள் மற்றும் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் தொழில் உபகரணங்கள் என்பன வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக குறித்த தொழிற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
-இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றுதல் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பனணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம் பெற்றது.
-குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன்,தொழிற்பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வெளிக்கன்ன,தேசிய இளைஞர் ரேசவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டீ.எம்.சிசர குமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தொழில் திணைக்க அதிகாரிகள் மற்றும் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது தொழிற்பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் தொழில் உபகரணங்கள் என்பன வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதல் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by Author
on
February 27, 2018
Rating:

No comments:
Post a Comment