அண்மைய செய்திகள்

recent
-

கைதுசெய்யப்பட்ட 14 இலங்கை அகதிகளிடம் விசாரணை தொடர்கிறது -


காங்கேசன்துறை வடக்கு கடற்பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட 14 இலங்கை அகதிகளிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களுள் 7ஆண்களும், 3பெண்களும் 4சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த அவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன், கடந்த 12 வருடங்களாக புதுக்கோட்டையிலுள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமை மற்றும் வதிவிடப்பிரச்சினை காரணமாக கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாடு திரும்பியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட 14 இலங்கை அகதிகளிடம் விசாரணை தொடர்கிறது - Reviewed by Author on May 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.