அண்மைய செய்திகள்

  
-

யாழ்ப்பாணத்தில் 'எறும்பூரும் பாதைகள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.



யாழ்ப்பாணம் வாழ் பெண் படைப்பாளி நிவேதா நிவேதிதா எழுதிய 'எறும்பூரும் பாதைகள்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 01.09.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமை வகித்தார்.

முன்னதாக விருந்தினர்கள் மலர்ச்செண்டுகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்[பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை கலைஞர் பவானந்தமூர்த்தி இசைத்தார். வரவேற்புரையினை ஒளிஅரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியர் பா.ஜெயிலா வழங்கினார். ஆசிரியர் து.சுதர்சன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.ஹம்சத்வனி நிகழ்த்தினார். நூலினை வடமாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.ஹம்சத்வனி, உடுவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் ரஜனி நரேந்திரா வெளியிட முதற்பிரதியினை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பிரதி அதிபரும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்திய இணைப்பாளருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

நூலின் ஆய்வுரையினை துணுக்காய் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எழுத்தாளர் கு.ரஜீபன் நிகழ்த்தினார்.

இறுதியாக நூலாசிரியர் நிவேதா நிவேதிதா அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது. நூல் வெளியீட்டிற்கான அனுசரணையினை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தது..

'எறும்பூரும் பாதைகள்' கவிதை நூல் என்பது முதற்படைப்பு எனும் அடிப்படையில் வெற்றி என்பதோடு, அடுத்த நகர்வின் ஆரம்பம் என்பதனை நூலாய்வுரை நிகழ்த்திய எழுத்தாளர் கு.ரஜீபன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.









யாழ்ப்பாணத்தில் 'எறும்பூரும் பாதைகள்' கவிதை நூல் வெளியீட்டு விழா. Reviewed by Author on September 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.