மன்னார் பொது நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைப்பு...
மன்னார் பொது நூலகத்தின் தற்போது வாசிப்பு மாத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் தலைமன்னாரை சேர்ந்த மொழிபெயர்ப்பு எழுத்தாளர் திரு .தேவா அவர்களால் மன்னார் பொது நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்கள் பொது நூலகத்தின் நூலகர் K.M.நிஷாத் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திரு .தேவா இவர் கடந்த மாதங்களுக்கு முன்பும் பெரியாரின் 22அரிய நூல் தொகுதியினை வழங்கி இருந்தமை பாராட்டுக்குரியது.
தற்போது பொது நூலகத்திற்கு நூல்களின் வரவால் வாசகர்களும் மாணாவர்களும் பயணடைவார்கள் இன்னும் புதிய வெளியீடுகளை உடனுக்குடன் நிர்வாகம் பொது நூலகத்திற்கு கொண்டுவருதல் சிறப்பான விடையம்.
நீங்களும் உங்களிடம் இருக்கும் நல்ல நூல்களினை பொதுநூலகத்திற்கு வழங்கினால் இன்னும் எமது சமுதாயத்தின் வாசிப்பு பழக்கம் அதிகமாகும் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் அல்லவா....
தொகுப்பு வை.கஜேந்திரன்

மன்னார் பொது நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைப்பு...
Reviewed by Author
on
September 17, 2018
Rating:

No comments:
Post a Comment