கல்லீரல் கொழுப்புக்களை எளிதில் சரிசெய்யும் கை வைத்தியம் -
இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களே ஆகும்.
கல்லீரலில் ஏற்படும் முக்கியமான ஓர் பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு. இதுவும் முறையற்ற உணவு முறைகளால் ஏற்படும் பிரச்சனையாகும்.
கல்லீரலில் கொழுப்பு செல்கள் அதிகமாக இருக்கும் நிலை தான் கல்லீரல் கொழுப்பு. கொழுப்புச் செல்கள் அதிகமானால் கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால் நாளடைவில் கல்லீரல் செயலிழக்கக்கூடும். இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்ககூடிய கொடிய நோயாகும்.
அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், தடுக்க முடியும். இதற்கு ஆரோக்கியமான மருத்துவமுறையே சிறந்ததாகும். அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.
- ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, 15 நாட்கள் தினமும் இரண்டு டம்ளர் குடித்து வர, கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகும்.
- தொடர்ந்து 25 நாட்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, விரைவில் குணமாகியிருப்பதை உணர்வீர்கள்.
- அதிமதுரத்தை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதோடு, அழுக்குகளும் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
- தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கல்லீரலின் இயக்கம் அதிகரித்து, அதன் ஆரோக்கியம் மேம்படும்.
கல்லீரல் கொழுப்புக்களை எளிதில் சரிசெய்யும் கை வைத்தியம் -
Reviewed by Author
on
December 29, 2018
Rating:

No comments:
Post a Comment