அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரி பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி உத்தரவு-காணிகளை....


படையினர் வசமுள்ள தனியார் விவசாய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கஜன் ராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் காணப்படும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் அதன்போது எழுகின்ற தடைகள் பற்றியும் விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி, “இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்ததுடன், தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச-தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வட, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அத்துடன், தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மைத்திரி பிறப்பித்துள்ள மற்றுமொரு அதிரடி உத்தரவு-காணிகளை.... Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.