அண்மைய செய்திகள்

recent
-

உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த! பொன்சேகா சாடல் -


இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
காலி முகத் திடலில் இன்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
சதித்திட்டத்தின் மூலம் மஹிந்தவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

தனது ஆட்சிக்காலம் முழுவதும் மஹிந்த சர்வாதிகாரியாகவே செயற்பட்டார். உலகில் பணக்காரர்கள் பட்டியலிலும் மஹிந்த ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளார்.
இவற்றை யாராலும் மறந்து விட முடியாது. நாட்டில் ஏற்படவிருந்த இனவாத ஆட்சியினை இல்லாதொழிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த! பொன்சேகா சாடல் - Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.