அண்மைய செய்திகள்

recent
-

சிறுத்தை புலி இறைச்சி விற்பனை - தம்பதியினர் உட்பட மூவர் கைது!

கண்டி, உடுதும்பர பிரதேசத்தில் சிறுத்தை புலியொன்றை கொலை செய்து இறைச்சிற்காக விற்பனை செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுதும்பர - கலல்கமுவ பிரதேசத்தில் பன்றி வேட்டைக்காக போடப்பட்டிருந்த பொறியொன்றில் குறித்த சிறுத்தை புலி சிக்கியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொறியில் சிக்கிய சிறுத்தையை கொலை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுத்தை புலியின் இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் (25) தெல்தெனிய நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

சிறுத்தை புலி இறைச்சி விற்பனை - தம்பதியினர் உட்பட மூவர் கைது! Reviewed by Author on September 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.