அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட பூசகரின் உதவியாளர் கைது

யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் ஆலய பூசகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இன்று (03) அதிகாலை இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். 

 புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் ஆலய பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பூசகரின் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட பூசகரின் உதவியாளர் கைது Reviewed by Author on October 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.