பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இன்று பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு 14 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் மேலும் 14 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
Reviewed by Author
on
December 22, 2020
Rating:

No comments:
Post a Comment