அண்மைய செய்திகள்

recent
-

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காட்டு யானையொன்று பலி

கஹட்டகஸ்திஹிலிய – நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. காட்டு யானையொன்று நேற்றிரவு (16) குறித்த கிராமத்திலுள்ள வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. 

 இதன்போது யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, யானை உயிரிழந்ததாக கஹட்டகஸ்திஹிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 

 மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காட்டு யானையொன்று பலி Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.