அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையின்றி வருவதை தவிர்க்கவும்

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்து கொள்ளமாறு வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.காண்டீபன் தெரிவித்தார். தற்போதைய அவசர நிலை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொதுமக்கள் முடிந்த அளவு வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். 

 குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் அவசியத்தேவையை தவிர வைத்தியசாலைக்கு வருவதை முற்றாக தவிர்க்கவும். மேலும் மாதாந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நோயாளர்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் வருகை தரவும். அத்துடன் வைரஸ் தாக்கத்தினை கருத்தில் கொண்டு வைத்தியசாலை வளாகத்தினை தொற்று நீக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய தேவையின்றி வருவதை தவிர்க்கவும் Reviewed by Author on December 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.