கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது
இந்நிலையில் நேற்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் உயிரிழந்த யானை, தந்தத்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸாரும் வன ஜீவராசிகள் திணைக்களமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment