அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளரை வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு முருங்கன் பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முருங்கன் பொலிஸ் நிலைய்ததிற்கு வருகை தருமாறு கோரி இன்று வியாழக்கிழமை(18) மாலை 2.30 மணியளவில் முருங்கன் பொலிஸார் நானாட்டானில் உள்ள எனது வீட்டிற்கு வருகை தந்து இன்றைய தினமே மாலை 3 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருகை தருமாறு கோரி இருந்தனர். 

  எனினும் பிரிதொரு நிகழ்வு இருந்தமையினால் திடீர் அழைப்பின் காரணமாக என்னால் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாளை வெள்ளிக்கிழமை மாலை முருங்கன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்கு மூலம் வழங்க உள்ளேன். மக்களின் பிரதி நிதி என்ற வகையில் மக்களின் உரிமைக்காக இடம் பெற்ற குறித்த பேரணியில் கலந்து கொண்டு எனது ஒத்துழைப்பை வழங்கினேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.



மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளரை வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு. Reviewed by Author on February 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.