அண்மைய செய்திகள்

recent
-

அதிகாலை 1 மணி அளவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்

புத்தூர், வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இன்று (28) அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் துரைராசா சந்திரகோபல் (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

 அவருடன் இருந்த பழைய பகையை காரணமாக சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதிகாலை 1 மணி அளவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் Reviewed by Author on March 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.