மக்களின் கடும் எதிர்பை மீறி சடலங்களை புதைப்பதற்கான ஏற்பாடு -இரணை தீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டம்
இரணை தீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்
நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரனை தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றையதினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மக்களின் கடும் எதிர்பை மீறி சடலங்களை புதைப்பதற்கான ஏற்பாடு -இரணை தீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டம்
Reviewed by Author
on
March 04, 2021
Rating:

No comments:
Post a Comment