அண்மைய செய்திகள்

recent
-

குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்த சம்பவம்: ஏனைய இரு குழந்தைகளும் சடலமாக அடையாளம்!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ஏனைய இரண்டு குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டதுடன் இரண்டு வயது ஆண் குழந்தை சடலமாக எடுக்கப்பட்டது. இந்நிலையில், ஏனைய இரு குழந்தைகளையும் தேடிவந்த நிலையில் அவர்களும் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளனர். 

 இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோயில் பகுதியில் இடம்பெற்றது. கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு குறித்த தாயார் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவர் உயிருடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

 இந்நிலையில், ஐந்து வயது மற்றும் எட்டு வயதுடைய இரு குழந்தைகள் தொடர்பாக பொலிஸாரும், கிராம மக்களும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்தனர். இதன்போது, குறித்த இரு குழந்தைகளும் கிணற்றில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருவதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்த சம்பவம்: ஏனைய இரு குழந்தைகளும் சடலமாக அடையாளம்! Reviewed by Author on March 04, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.