அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'கொரோனா' தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் புதிதாக 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று சனிக்கிழமை (21) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் 29 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இவர்களில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த போது மேற்கொள்ள பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் 16 தொற்றாளர்களும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகளின் போது 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -இவர்களில் முசலி பிரதேசச் செயலகத்தில் 4 தொற்றாளர்களும், நானாட்டான் பிரதேச சபையில் 2 தொற்றாளர்களும், விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும்,மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் 2 தொற்றாளர்களும், முருங்கன் தள வைத்தியசாலையில் 1 தொற்றாளர் இவ்வாறு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இம் மாதம் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 356 கொரோனா தொற்றாளர்களும்,இவ்வருடம் மாத்திரம் 1380 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1397 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



மன்னாரில் 'கொரோனா' தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு Reviewed by Author on August 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.