அண்மைய செய்திகள்

recent
-

வத்தளைக் கடலில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு

வத்தளை பிரித்திபுர கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவர் சடலங்களாக நேற்று திங்கட்கிழமை காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். வத்தளை பிரித்திபுர கடற்கரைக்கு கடந்த ஞாயிறன்று மாலை பாடசாலை மாணவர்கள் நால்வர் சென்றுள் ளனர். அவர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளை அவர்களில் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தனர். 

அவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேச வாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் நேற்றுக் காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வத்தளை எந்தேரமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.கே.ருவிந்த புன்சர(15 வயது)மற்றும் எம்.சஞ்சித சந்தகெலும்(15 வயது) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

வத்தளைக் கடலில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு Reviewed by Author on December 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.