அண்மைய செய்திகள்

recent
-

இனி கடைகளில் பால் தேநீர் விற்பனை செய்யப்படாதாம் என அறிவிப்பு!

பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

 ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 80 ரூபாய்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளதால், பால் தேநீரை விற்பனை செய்வதிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பால் மாவின் விலை அதிகரித்துள்ள இவ்வேளையில் மீண்டும் ஒரு கப் பால் தேநீரின் விலையை அதிகரித்தால் அதனை நுகர்வோர்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இனி கடைகளில் பால் தேநீர் விற்பனை செய்யப்படாதாம் என அறிவிப்பு! Reviewed by Author on December 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.