அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு

கிராமத்தில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பெற்றோர்களால் குரவில் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். 

 பாடசாலை முடிந்த பின்னர் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் பெண்கள் வீதியில் செல்லமுடியாத நிலை என்றும் 400 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் 250 ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் மத்தியில் ஜஸ்,கெரோயின்,கஞ்சா அதிகமாக காணப்படுகின்றது பொலீசில் முறைப்பாடு செய்தும் எந்த பயனும் இல்லை துஸ்பிரயோகம் அற்ற கிராம மாக எங்கள் கிராமம் காணப்படவேண்டும். அரசாங்கம் வாக்கினை கேட்பவர்கள் என்ன செய்கின்றார்கள்?போதைப்பொருள் பாவனையால் பெண்கள் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள் குடும்பத்தில் பிரச்சினையினை ஏற்படுகின்றது சிறு பிள்ளைகளை இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்துகின்றார்கள். எனவே கிராமத்தில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
















முல்லைத்தீவில் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு Reviewed by Author on June 08, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.