அண்மைய செய்திகள்

recent
-

அருவருக்கதக்க வகையில் பொதியிடப்பட்ட பழப்புளித் தொகை மீட்பு!

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ் நகர பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

 யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்க வகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில், நேற்று மாலை பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால் குறித்த களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது. மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6,000 கிலோ கிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

.
அருவருக்கதக்க வகையில் பொதியிடப்பட்ட பழப்புளித் தொகை மீட்பு! Reviewed by Author on October 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.