2023 இலங்கையின் சிறந்த தொலைபேசி ஊடகவியளாலருக்கான விருதை வென்றார் ஜோசப் நயன்
இலங்கையில் முதல் முறையாக நடத்தப்பட்ட
Srilanka’s FIRST Mobile journalisam Festival தொலைபேசி ஊடகவியல் விருது விழாவில் தமிழ்,சிங்கள,ஆங்கில கதைகளில் மன்னார் மாவட்ட ஊடகவியளாலர் ஜோசப் நயனின் கதை சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது
USAID Sri Lanka,IREX இணைந்து நடத்திய Srilanka’s FIRST Mobile journalisam Festival கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு நாள் நிகழ்வாக கொழும்பில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் சர்வதேச ஊடகவியளாலர்கள் ஊடாக தொலைபேசி ஊடகவியல் தொடர்பிலான தெளிவுபடுத்தல்கள் புதிய நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள ஊடகவியளாலர்கள் ஆவணப்படத்தயாரிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது
அதில் ஒரு பகுதியாக நாட்டின் சிறந்த தொலைபேசி ஊடகவியளார்களுக்கான கதை தயாரிப்பதற்கான போட்டி இடம் பெற்ற நிலையில் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கதைகளில் மன்னார் பேசாலை பகுதியில் மீன்பிடி சார்ந்த உபதொழில்களை மேற்கொண்டு வரும் மீனவ பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட ஊடகவியளாலர் ஜோசப் நயனால் உருவக்கப்பட்ட கதை முதலாவது இடத்தை பெற்று கொண்டது
2023 இலங்கையின் சிறந்த தொலைபேசி ஊடகவியளாலருக்கான விருதை வென்றார் ஜோசப் நயன்
Reviewed by Author
on
June 26, 2023
Rating:

No comments:
Post a Comment