நீதிபதி பதவி விலக குருந்தூர்மலை விவகாரம்-தொல்பொருள் திணைக்களம் முக்கியகாரணம்
அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
ஆகவே அதனை அறிந்து கொண்ட இந்து மதத்தினை சேர்ந்த நிர்வாகத்தினரும் ஆதரவாளர்களும் நீதிமன்றில் விண்ணப்பம் அனுப்பப்பட்ட நிலையில் மறுதரப்பிற்கும் அனுப்பப்பட்டு அவர்களும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுடன் தொல்லியல் திணைக்களத்தினர் களவியயம் ஒன்றினை மேற்கொள்ள இரு தரப்பும் இணங்கி இருந்தார்கள்.
கள வியயம் என்பது ஒரு நீதிபதி அங்கு செல்கின்ற அமர்வாகத்தான் கருதப்படவேண்டும் அங்கு வாதி,பிரதிவாதி,அவர்களுக்குரிய சட்டத்தரணிகள் மாத்திரம் அங்கு வாதங்களையும் பிரதிவாதங்களையும் சமர்ப்பணங்களையும் செய்யமுடியுமே தவிர பொதுமக்களோ வேறு அதிகாரிகளோ யாருமே அதனை செய்யமுடியாது. அதில் உள்ள கட்சிக்காரர்களும் சட்டத்தரணிகளும் கலந்துகொள்ளவேண்டிய தேவைப்பாடு இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவர்கள் நீதிபதியுடன் கதைப்பதற்கும் நீதிபதிக்கு சில விடையங்களை தெளிவுபடுத்துவதற்கும் எத்தனித்த போது நீதிபதி அவ்வாறு அனுமதிக்கமுடியாது இங்கு வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் எல்லோருக்கும் சந்தர்பத்தினை வழங்கமுடியாது முக்கியமாக களவியத்தினை மேற்கொள்ளவேண்டியதன் நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்து அதனை முடித்துக்கொண்டு அதற்கான கட்டளைகளையும் வழங்கியுள்ளார்
அதில் அதிர்ப்த்தியுற்ற சரத்வீரசேகரா அவர்கள் பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமையினை பயன்படுத்தி மாவட்ட நீதிபதியினை அச்சுறுத்தும் விதமாகவும் அதன் பின்னர் அவர் தனிப்பட்ட விடையங்கள் தொடர்பாகவும் தொடச்சியாக கருத்துக்களை தெரிவித்து ஒரு நீதிபதியை அவமானத்திற்குள்ளாக்கி அழுத்தங்களை பிரயோகிக்கும் அளவிற்கு அல்லது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் அளவிற்கு செயற்பட்டுள்ளார்.
இவரின் இந்த கருத்திற்காக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இருதடவைகள் பணி புறக்கணிப்பினை மேற்கொண்டோம் அதன் மூலம் இவ்வாறான தலையீடுகள் குறையும் அல்லது திருத்திக்கொள்வார்கள் என்று எதிர்பார்திருந்தோம் அவ்வாறு எதுவும் இடம்பெறாமல் தொடர்ச்சியாக செயற்பட்டதன் காரணமாகத்தான் மாவட்ட நீதிபதி அவர்கள் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அவரது கடிதத்தில் குறிப்பிட்ட விடையங்கள் ஒன்று உயிர் அச்சுறுத்தல் தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆகவே அவை பிரயோகிக்கப்படாவிட்டால் இந்த நாட்டைவிட்டு செல்லவேண்டிய சூழ்நிலை தற்போது இருந்திருக்காது ஆனால் தற்போது பாராளுமன்றத்திலும் அரசாங்கத்தினாலும் சொல்லப்படும் விடையம் அவர் ஒரு நீதிபதி பிடியாணை விட்டிருக்கலாம் நடடிவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் என்று அதற்கான அவகாசம் கொடுத்ததும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இல்லை ஆனால் அவர்கள் விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையம் அழுத்தங்களையும் பிரயோகித்து வந்துள்ளார்கள்.
இந்த விடையம் குருந்தூர்மலை விவகாரத்தில் இருந்து எழுந்தது என்பதை தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது.
வெறுமன இருந்த கல்லுகளும் மலையும்,மணலுகளுமாக இருந்த இடம் தற்போது விகாரை ஒன்றினை கட்டி பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றப்பட்டுள்ளது ஆகவே கட்டளை மீறப்பட்டுள்ளமைதெட்டத்தெளிவாக தெரிகின்றது இதில் நீதித்துறை அமைச்சரின் கூற்றுக்களும் நீதிபதியின் பிரச்சனை அவரே அதனை தீர்த்திருக்கவேண்டும் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்ற விதமாக கூறியுள்ளார் அகவே நீதிசேவை ஆணைக்குழுதான் அதனை செய்யவேண்டும் என்று
எவ்வாறு இருந்தாலும் ஒரு நீதிபதி பதவி விலகி செல்கின்றார் என்றால் மொத்தநாட்டிற்கே அவமானமான விடையமும் எல்லோருமே தத்தமது கடமைகளை உணர்ந்து செயற்படவேண்டிய விடையமாக இருக்கின்றது
இதற்கு முக்கிய பொறுப்பு தொல்லியல் திணைக்களமாக இருக்கின்றது ஏன் என்றால் கட்டளையினை மீறி நடப்பதற்கு அனுசரணையாக இருந்துள்ளார்கள்.
அதேபோல் அச்சுறுத்தல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இவ்வாறான விடையங்கள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவ மாவட்ட சட்டத்தரணிகள் நான்காவது நாளாக தமது பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டிருக்கின்றார்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
09.10.2023 அன்று கொ சகல சட்டத்தரணிகளும் இணைந்து பகிஸ்கரிப்பினையும் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம் இதன் மூலம் தீர்வுகள் எட்டப்பட் வாய்ப்புக்கள் முயற்சிகள் இருந்தால் பணிபகிஸ்கரிப்பு தொடர்பில் சில தீர்மானங்களை எடுப்போம் இல்லாவிட்டல் பல்வேறு வடிவங்களில் பகிஸ்கரிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நீதிபதிக்கு தீர்வு கிடைக்கும்வரை நியாயம் கிடைக்கும்வரை இந்த நாட்டில் நீதித்துறை சுதந்திரமும் நீதிபதிகளின் சுயாதீனதன்மையும் பேணப்படும் நிலமை ஏற்படும்போதுதான் புறக்கணிப்பு நடவடிக்கை முற்றுப்பெறும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
நீதிபதி பதவி விலக குருந்தூர்மலை விவகாரம்-தொல்பொருள் திணைக்களம் முக்கியகாரணம்
Reviewed by Author
on
October 05, 2023
Rating:

No comments:
Post a Comment