அண்மைய செய்திகள்

recent
-

மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு கள விஜயமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும் !

 மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு  கண்காணிப்பு கள விஜயமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும் !



கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்

இந்த கண்காணிப்பு கள விஜயத்தின் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸதீன் இவ் வைத்தியசாலையில் சுமார் 1.5 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விடுதி கட்டிடத்தை பார்வையிட்டதுடன் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்தக்காரரையும் கலந்தாலோசனையும் செய்தனர்


இந்த விஜயத்தில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம் மாஹிர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் குறித்த கள விஜயத்தில் இணைந்து கொண்டதுடன் வேலைத்திட்டத்தை விரைவாக முடிவுறுத்தி அதனை பாவனைக்காக கையளிப்பது தொடர்பிலும்  கலந்தாலோசித்தனர்

குறித்த நிகழ்வில் வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த  குளிரூட்டி வழங்கி வைக்கப்பட்டதுடன் ஞாபகார்த்தமாக மரமொன்றையும் பணிப்பாளர் நட்டு வைத்தார். மல்வத்தை பிரதேச வைத்திய அதிகாரி அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய சாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





.


மல்வத்தை பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு கள விஜயமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும் ! Reviewed by வன்னி on January 20, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.