அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு குறித்து முன்னாயத்த கலந்துரையாடல் முன்னெடுப்பு.

 மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு குறித்து முன்னாயத்த கலந்துரையாடல் முன்னெடுப்பு.




இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு  மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும்   நடவடிக்கைகள் தொடர்பான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று(19) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்   க.கனகேஸ்வரன்  தலைமையில் மன்னார் மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,திணைக்கள  தலைவர்கள், முப்படை  அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட  செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர் வரும் 4 ஆம் திகதி இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மன்னார் மாவட்டச் செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுதந்திர தின நிகழ்வுகள் குறித்தும் அரசாங்க அதிபரினால் தெளிவு படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






மன்னார் மாவட்டத்தில் இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு குறித்து முன்னாயத்த கலந்துரையாடல் முன்னெடுப்பு. Reviewed by வன்னி on January 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.