வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் - 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் - 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது
இந்நிலையில் அவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துச்செல்லும் அந்த காட்சியினை பார்த்து நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற அவர்களின் உறவினர்கள் எந்தவொரு குற்றமும் செய்யாமல் இறைவனை வழிபட்டமைக்கு இவ்வாறு சிறைவாசம் அனுப்பவிப்பதாக தெரிவித்து கண்ணீர் மல்கி அழுதிருந்தனர்
அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இன்றையதினம் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment