அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து 30 மாணவர்கள் காயம்

 ஹங்வெல்ல ரணல பிரதேசத்தில் தனியார் பேருந்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு – அவிசாவளை வீதியில் தனியார் பேருந்தொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

கொழும்பில் இருந்து பயணித்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

காயமடைந்த மாணவர்கள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து 30 மாணவர்கள் காயம் Reviewed by Author on June 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.