இந்தியாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை
இந்தியாவில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் காரணமாக இலங்கையை அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமாக பறவைகளை தாக்கும் இன்புளுவன்சா வைரஸினால் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதாகவும், இந்த வைரஸ் மற்ற விலங்குகளையும் மனிதர்களையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு அரிதாக இருந்தாலும், விலங்குகளுடன் வசிப்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை
Reviewed by Author
on
June 22, 2024
Rating:

No comments:
Post a Comment