அண்மைய செய்திகள்

recent
-

ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்

நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் என இன்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தமிழரசுக் கட்சி நிலைப்பாடு தொடர்பிலே எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

தமிழரசு கட்சியை நம்பியிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள். இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் இருந்து வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலை திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தினார்.

நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை தொடர்பிலும் அவர் தொடர்பான சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்




ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் Reviewed by Author on September 13, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.