சமூக வலைத்தளங்களில் கேலிக்கூத்தாக மாறி உள்ள மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் வேட்பாளர்
மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சட்டத்துறையில் பயிலக்கூடிய ஹலிஸ்ரா எனும் இளம் பெண் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் தேர்தலில் களம் இறங்குவதாக தன்னுடைய முகநூல் பதிவுகளில் பகிரங்கப்படுத்தி இருந்தார்
இதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தங்களுடைய வேட்பாளர் பட்டியலில் குறித்த பெண்ணினுடைய பெயரை இணைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும் இருப்பினும் குறித்த இளம் பெண் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடவில்லை என அக்கட்சியிடம் இறுதி நேரத்தில் அறிவித்திருக்கின்றார்
இதேவேளை குறித்த பெண்
தான் இம்முறை கட்சியிலும் போட்டியிடவில்லை என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகரிடம் கூறி விட்டு இறுதி நேரத்தில் அதாவது நேற்றைய தினம் தமிழரசு கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றார் எனவே இவ்விடயம் இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் கேலிக்குரிய ஒரு விடயமாக மாறி இருக்கின்றது ஒரு பொதுத் தேர்தலில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியும் மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தியும் பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒருவர் இறுதி நேரத்தில் தன்னுடைய முடிவுகளை மாற்றக்கூடிய ஒருவராக செயற்படலாமா?... அப்படியாயின் இப்படியான கட்சி தாவல்களை செய்யக்கூடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டால் இவர்கள் முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடுவார்களா? என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது
இப்படியாக தங்கள் முடிவுகளை திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள் நாளை மன்னார் மாவட்டத்தின் உடைய மாற்றத்திற்காக செயப்படுவார்களா? என்று சிந்தியுங்கள் ...

No comments:
Post a Comment