வெப்பநிலை தொடர்பில் வௌியான எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்பநிலை தொடர்பில் வௌியான எச்சரிக்கை
Reviewed by Vijithan
on
April 16, 2025
Rating:

No comments:
Post a Comment