அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மாநாடு

 "தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வென்றெடுப்போம்" எனும் தொணிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான இவ்வருட மாநாடு மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்றிருந்தது


மன்னார் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  சங்கத்தலைவர் விக்டரின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த மாநாட்டில் விசேட அழைப்பின் பெயரில் ஒன்றிணைந்த அபிவிருத்தி  அலுவலர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தொழிளாலர் போராட்ட மத்திய நிலையத்தின் தேசிய குழு உறுப்பினர் மார்க்ஸ் 

 பிரபாஹர் உட்பட அழைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோக்ஸ்த்கர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்


குறித்த மாநாட்டில் மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும்,பொருத்தமற்ற பணி சுமை வழங்கப்படுகின்றமை,பதவி உயர்வு விடயங்களில் காணப்பட்டும் குறைபாடுகள்,ஏனைய மாவட்டங்களில் நடைமுறையில் இல்லாத சில அனுகு முறைகள் மன்னார் மாவட்டத்தில் இடம் பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது


அதே நேரம் அபிவிருத்தி உத்தியோகஸ்த்கர்கள் தங்கள் பணிகளை கெளரவமாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்ற சூழ்நிலைகளும் நிலவுவதாக குற்றம் சுமத்தியிருந்தனர் இவ்வாற செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் விரைவில் ஒன்றிணைத தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் மாநாட்டின் பின்னரான ஊடக சந்திப்பின் போது அபிவிருத்தி உத்தியோகஸ்த்கர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது 









மன்னாரில் இடம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மாநாடு Reviewed by Vijithan on June 12, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.