அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மன்னர் நகர கிளையினால் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் கள் ,உப தவிசாளர் கௌரவிப்பு
மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் கள் மற்றும் உப தவிசாளர் களை கௌரவிக்கும் நிகழ்வு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மன்னர் நகர கிளையின் தலைவர் அஷ்ஷேஹ் அசீம் தலைமையில் நேற்று சனிக்கிழமை(27) மன்னார் ஆர். டி .எப். மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஜப்ரான்,மன்னார் நகரசபையின் உப தவிசாளர் . முஹம்மது உசன்,மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளர் . சாந்தினி குரூஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வருகை தந்த கௌரவ அதிதிகளுக்கு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மன்னர் நகர கிளையின் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Reviewed by Vijithan
on
July 27, 2025
Rating:




.jpeg)

No comments:
Post a Comment