அண்மைய செய்திகள்

recent
-

அரியாலை சித்துப்பாத்தி மாயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தடய பொருட்களை - பொதுமக்கள் அடையாளம் காண்பதற்கான, யாழ்ப்பாணம் நீதிமன்றின் அழைப்பு கட்டளை.

 யாழ்ப்பாணம் 6.9 வீதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மெற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின்பொழுது, மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து. அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்தின் பிரகாரம், நீதிமன்றமானது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025.08.05ஆம் திகதி 13:30 மணிமுதல் 17:00 மணிவரை, மேற்படி உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) காட்சிப்படுத்தப்படவுள்ளன. அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க இத்தால் பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

மேற்படி கட்டளையானது, குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 124இன் கீழ், நீதிவான் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்ட தற்துணிவின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது.







அரியாலை சித்துப்பாத்தி மாயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் கண்டெடுக்கப்பட்ட தடய பொருட்களை - பொதுமக்கள் அடையாளம் காண்பதற்கான, யாழ்ப்பாணம் நீதிமன்றின் அழைப்பு கட்டளை. Reviewed by Vijithan on August 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.