அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம்- விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு.

 மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன்   (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடத்தல் தீவு  மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு   ஆதரவை வழங்கியுள்ளனர்.


மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டம் இன்றைய தினம் (28)வியாழன் 26 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில்  விடத்தல் தீவு  மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து  கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.


போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.









மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம்- விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு. Reviewed by Vijithan on August 28, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.